search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாலிபர் பலி"

    • 2 இணை இயக்குனர்கள் கொண்ட விசாரணை குழுவை அமைத்துள்ளது.
    • 2 நாட்களில் விசாரணை அறிக்கை சமர்பிக்கவும் அதிரடி உத்தரவு.

    புதுச்சேரி முத்தியால்பேட்டை டி.வி. நகரைச் சேர்ந்த ஹேமசந்திரன் (26), உடல் பருமன் காரணமாக சென்னை பம்மலில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று முன்தினம் அறுவை சிகிச்சை மேற்கொண்டார். கொழுப்பு நீக்க அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களில் அவர் இறந்துவிட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவித்துள்ளனர்.

    அவர் கார்டியாக் அரெஸ்ட் காரணமாக இறந்ததாக குறிப்பிட்டனர்.

    இதையடுத்து அவரது குடும்பத்தினர் சென்னை பம்மல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், உடல் பருமன் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

    2 இணை இயக்குனர்கள் கொண்ட விசாரணை குழுவை அமைத்து சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

    2 நாட்களில் விசாரணை அறிக்கை சமர்பிக்கவும் அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    விசாரணைக்குழு அமைக்கப்படும் என பெற்றோருக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி அளித்திருந்த நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ஹேமசந்திரன் உடல் பருமன் காரணமாக சென்னை பம்மலில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார்.
    • அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களில் அவர் இறந்து விட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவித்துள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி முத்தியால்பேட்டை டி.வி. நகரைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியர்.

    இவருக்கு ஹேமசந்திரன், ஹேமராஜன் என இரட்டை ஆண் பிள்ளைகள் உள்ளனர். இவர்களுக்கு (வயது 26). இதில் ஹேமசந்திரன் பி.எஸ்.சி. ஐ.டி. முடித்து விட்டு டிசைனிங் பணியில் உள்ளார். ஹேமராஜன் சித்தா பார்மசிஸ்ட் பணியில் உள்ளார்.

    இதில் ஹேமசந்திரன் உடல் பருமன் காரணமாக சென்னை பம்மலில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார்.

    இந்த நிலையில் நேற்று அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது.

    அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களில் அவர் இறந்து விட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவித்துள்ளனர். அவர் கார்டியாக் அரெஸ்ட் காரணமாக இறந்ததாக குறிப்பிட்டுள்ளனர்.

    இதையடுத்து அவரது குடும்பத்தினர் சென்னை பம்மல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • குடியிருப்பு கேட்-ன் அருகே இருந்த தண்ணீர் தொட்டி திறந்து கிடந்ததை அவர் கவனிக்கவில்லை.
    • தண்ணீர் தொட்டியை மூடிவிட்டு மனிதநேயத்தை குண்டுகுழியில் புதைத்த நபரை வசைபாடி வருகின்றனர்.

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள கோண்டாபூரில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. அதில் ஷேக் அக்மல் என்ற இளைஞர் (22 வயது) வசித்து வந்துள்ளார். இவர் வழக்கமாக ஜிம்முக்கு சென்று வந்துள்ளார். நேற்று அதிகாலை வழக்கம் போல் ஜிம்முக்கு சென்று விட்டு மீண்டும் குடியிருப்புக்கு திரும்பியுள்ளார்.

    அப்போது குடியிருப்பு கேட்-ன் அருகே இருந்த தண்ணீர் தொட்டி திறந்து கிடந்ததை அவர் கவனிக்கவில்லை. இதனால், எதிர்பாராத விதமாக தண்ணீர் தொட்டிக்குள் விழுந்துள்ளார் ஷேக் அக்மல். இதனை குடியிருப்பில் இருந்த நபர் பார்த்தும், பார்க்காதது போல் இருந்தது மட்டுமல்லாமல் ஷேக் அக்மலை காப்பாற்ற முயற்சிக்காமல் தண்ணீர் தொட்டியை மூடிவிட்டு சென்றுள்ளார்.

    இந்த சம்பவங்கள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி-யில் பதிவாகியுள்ளது. மனிதத் தவறால் நிகழ்ந்த எதிர்பாராத சம்பவம் என்ற போதும், தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த நபரை காப்பாற்றாமல் தண்ணீர் தொட்டியை மூடிச்சென்ற அந்த நபரின் செயல் மனிதநேயம் குறித்து பல்வேறு கேள்விகளை நம் முன்னே எழுப்புகிறது.

    தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த ஷேக் அக்மல் உயிரிழந்த நிலையில், இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியான நிலையில், இளைஞரை காப்பாற்றாமல், தண்ணீர் தொட்டியை மூடிவிட்டு மனிதநேயத்தை குண்டுகுழியில் புதைத்த நபரை வசைபாடி வருகின்றனர்.

    • தளவாய்பட்டி பிரிவு சாலையின் அருகே நாய் குறுக்கே வந்ததால் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் இருவரும் படுகாயம் அடைந்தனர்.
    • ஜானி பிரகாஷின் உடலை கைப்பற்றிய ஆத்தூர் ஊரக போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஜானி பிரகாஷ்( 39). இவரது மனைவி அனிதா (39). இவர் சேலம் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

    இன்று நடைபெறும் தேர்தலுக்காக சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள சந்தனகிரி அரசு தொடக்கப்பள்ளியில் தேர்தல் பணிக்காக அனிதா தனது கணவர் ஜானி பிரகாஷ் உடன் இருசக்கர வாகனத்தில் அனிதாவின் தாய் வீடான ஏத்தாப்பூரில் இருந்து ஆத்தூரை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது தளவாய்பட்டி பிரிவு சாலையின் அருகே நாய் குறுக்கே வந்ததால் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் இருவரும் படுகாயம் அடைந்தனர். அங்கிருந்த பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் பெத்தநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி ஜானி பிரகாஷ் உயிரிழந்தார். மேலும் படுகாயம் அடைந்த நிலையில் அனிதா சேலம் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதனையடுத்து ஜானி பிரகாஷின் உடலை கைப்பற்றிய ஆத்தூர் ஊரக போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • தொழிலாளி, வாலிபர் பலியான சம்பவம் அந்த பகுதியில்பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டம் கொட்டாரம் அருகே உள்ள குலசேகரபுரம் லட்சுமி புரத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீ லிங்கம் (வயது 54), தொழிலாளி. இவரது மகன் செல்வா (19). நேற்று மாலை தந்தை-மகன் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    இதில் ஆத்திரம் அடைந்த செல்வா, தனது மோட்டார் சைக்கிளை அந்தப்பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றுக்குள் தள்ளி விட்டாராம். இதைதொடர்ந்து அவரது தந்தை ஸ்ரீ லிங்கம், மோட்டார் சைக்கிளை எடுப்பதற்காக கிணற்றுக்குள் இறங்கி உள்ளார். ஆனால் அவர் தண்ணீரில் மூழ்கியதாக கூறப்படுகிறது. இதனால் அவரை மீட்க அதே பகுதியை சேர்ந்த செல்வன் (34) என்பவர் கிணற்றுக்குள் இறங்கி உள்ளார். ஆனால் அவரும் தண்ணீரில் மூழ்கினார்.

    இதுகுறித்து கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் தீயணைப்பு வீரர்கள் நிலைய அலுவலர் தலைமையில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் கிணற்றுக்குள் இறங்க முயன்றபோது, கிணற்றுக்குள் விஷவாயு பரவி இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து பாதுகாப்பு உபகரணங்கள் உதவியுடன் கிணற்றுக்குள் இறங்கிய தீயணைப்பு வீரர்கள், ஸ்ரீலிங்கம் மற்றும் செல்வன் உடல்களை பல மணி நேரம் போராடி நள்ளிரவு மீட்டனர். பின்னர் 2 உடல்களும் கரைக்கு கொண்டு வரப்பட்டன.

    கிணற்றுக்குள் தள்ளி விடப்பட்ட மோட்டார் சைக்கிளில் இருந்து பெட்ரோல் கசிந்து கிணறு முழுவதும் விஷவாயு பரவி இருந்ததால் ஸ்ரீலிங்கம் மற்றும் செல்வன் மூச்சு திணறி பலியாகி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    இது பற்றிய தகவல் அறிந்ததும் கன்னியாகுமரி போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ்குமார் மற்றும் அஞ்சுகிராமம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடல்களை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். அதன் பிறகு ஸ்ரீலிங்கம் மற்றும் செல்வன் உடல்களை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து அஞ்சு கிராமம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொட்டாரம் அருகே கிணற்றுக்குள் கிடந்த மோட்டார் சைக்கிளை மீட்கச் சென்ற தொழிலாளி-வாலிபர் பலியான சம்பவம் அந்த பகுதியில்பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • பூக்கந்தரூபன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகே உள்ள நல்லூரை சேர்ந்தவர் பரமசிவன். இவருடைய மகன் பூக்கந்தரூபன் (வயது29). ஐ.டி.ஐ. படித்துள்ள இவர் நேற்று மாலையில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே வந்தார்.

    அப்போது, அவர் கையில் கூலித் தொழிலாளி அனைவருக்கும் அரசு வேலை வேண்டும் என்று பதாகையை பிடித்தபடி நின்றார். பின்னர் அவர் திடீரென நான்கு வழிச்சாலை ஓரத்தில் வைத்து தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்தார். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மற்றும் பொதுமக்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். ஆனாலும் அவரது உடல் முழுவதும் தீயில் கருகியது. உடனடியாக அவரை தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில் பூக்கந்தரூபன் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் ராஜேஷ்வரி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சூரக்காடு பகுதியில் ஒரு காலி வீட்டில் பட்டாசுகள் இறக்கி வைக்கப்பட்டது.
    • படுகாயமடைந்தவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் திருப்போனித்துரா அருகே உள்ள புதியகாவு கோவிலில் திருவிழா நடந்து வருகிறது. இதையொட்டி வாணவேடிக்கை நிகழ்ச்சி நடத்துவதற்காக பாலக்காட்டில் இருந்து சரக்கு வாகனத்தில் பட்டாசுகள் கொண்டுவரப்பட்டன.

    திருப்போனித்துரா அருகே உள்ள சூரக்காடு பகுதியில் ஒரு காலி வீட்டில் பட்டாசுகள் இறக்கி வைக்கப்பட்டது. அப்போது அந்த வீட்டில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் திடீரென வெடித்து சிதறின. அதிலிருந்து பற்றிய தீ, பட்டாசுகளுடன் நின்ற வாகனத்துக்கும் பரவியது.

    இதனால் வாகனத்தில் இருந்த பட்டாசுகளும் வெடித்து சிதறின. இதில் அந்த பகுதியில் நின்றுகொண்டிருந்த ஏராளமானோர் படுகாயமடைந்தனர். தீயணைப்பு வீரர்களும், போலீசாரும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் பட்டாசுகள் ஏற்றி வந்த வாகனத்தை ஓட்டிவந்த திருவனந்தபுரத்தை சேர்ந்த விஷ்ணு (வயது28) பரிதாபமாக இறந்தார்.

    படுகாயமடைந்தவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அவர்களில் திவாகரன் (55) என்ற முதியவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் பட்டாசு விபத்தில் பலியானர்களின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்தது.

    இந்த விபத்தில் படுகாயமடைந்த அனில்(49), மதுசூதனன்(60), ஆதர்ஷ்(29), ஆனந்தன்(69) உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டவர்களுக்கு தொடர்ந்து தீவிர சிகிசை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த விபத்து தொடர்பாக தேவசம் அதிகாரிகள் சதீஷ்குமார், சசிகுமார், ஒப்பந்த தொழிலாளர்கள் வினித், வினோத் ஆகிய 4 பேரை ஹில்பேலஸ் போலீசார் இன்று கைது செய்தனர்.

    சஜேஷ்குமார், தேவசம் செயலாளர் ராஜேஷ், பொருளாளர் சத்யம், ஒப்பந்ததாரர்கள் ஆதரஷ் உள்ளிட்ட சிலர் மீதும் 305, 308, 427, 337 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டு உள்ளது.

    • கண்ணிமைக்கும் நேரத்தில் பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியதால், அப்பகுதியே புகை மண்டலமாக மாறியது.
    • விபத்தில் பட்டாசு வைத்திருந்த வீடு தரைமட்டமானது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் திருப்போனித்துரா அருகே புதிய காவு கோவில் உள்ளது. இக்கோவிலில் திருவிழா நடந்து வருகிறது. இதையொட்டி வாணவேடிக்கை நிகழ்ச்சி நடக்க இருக்கிறது. இதற்காக பாலக்காட்டில் இருந்து சரக்கு வாகனத்தில் பட்டாசுகள் திருப்போனித்துரா அருகே சூரக்காடு பகுதிக்கு கொண்டு வரப்பட்டது. இந்த வாகனத்தை திருவனந்தபுரத்தை சேர்ந்த விஷ்ணு (வயது 28) என்பவர் ஓட்டினார்.

    தொடர்ந்து அப்பகுதியில் உள்ள ஒரு காலி வீட்டில் பட்டாசுகளை சிலர் இறக்கி வைத்து கொண்டிருந்தனர். அப்போது வீட்டில் திடீரென பட்டாசுகள் வெடித்து சிதறின. இதனால் வாகனத்தில் இருந்த பட்டாசுகளுக்கும் தீ பரவியது. கண்ணிமைக்கும் நேரத்தில் பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியதால், அப்பகுதியே புகை மண்டலமாக மாறியது. அருகில் உள்ள வீடுகள் அதிர்ந்ததோடு, ஜன்னல் கண்ணாடிகள், மேற்கூரைகள் உடைந்தன.

    இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் விஷ்ணு உடல் கருகி உயிரிழந்தார். மேலும் 16 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டு எர்ணாகுளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    இந்த விபத்தில் பட்டாசு வைத்திருந்த வீடு தரைமட்டமானது. சரக்கு வாகனம் முற்றிலும் எரிந்து நாசமானது. 20 வீடுகள் சேதமடைந்தன. பட்டாசு விபத்து ஏற்பட்டதற்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து திருப்போனித்துரா போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • சட்டவிரோதமாக விவசாய நிலத்தில் உள்ள மோட்டார் அறையில் பட்டாசு மற்றும் பொட்டு வெடி தயார் செய்து வந்துள்ளார்.
    • இன்று காலை அந்த மோட்டார் அறையில் இருந்து பயங்கர வெடிச்சத்தம் கேட்டது.

    சாத்தூர்:

    விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் அரசின் அனுமதி பெற்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வந்தபோதிலும், அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் வகையிலும், சட்டவிரோதமாகவும் பட்டாசு தயாரிப்பில் ஏராளமானோர் ஈடுபட்டு வருகிறார்கள்.

    பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவும் இல்லாத காரணத்தால் அவ்வப்போது ஏற்படும் விபத்துகளில் விலையில்லா உயிர்கள் பறிபோவது தடுக்க முடியாததாகி வருகிறது. அதேபோல் இன்று காலை நடந்த வெடிவிபத்தில் வாலிபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். அதுபற்றிய விபரம் வருமாறு:-

    சாத்தூரை அடுத்த சின்ன கொல்லப்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் கழுகுமலையை சேர்ந்த ராஜகோபால் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. தற்போது விவசாயம் எதுவும் செய்யப்படாத நிலையில் அவர் பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.

    மேலும் சட்டவிரோதமாக விவசாய நிலத்தில் உள்ள மோட்டார் அறையில் பட்டாசு மற்றும் பொட்டு வெடி தயார் செய்து வந்துள்ளார். அங்கு ரகசியமாக விவசாய வேலை பார்ப்பதற்கு ஆட்களை அழைத்து வருவது போன்று சிலரை அழைத்து வந்து இந்த சட்டவிரோத பட்டாசு தயாரிப்பை நடத்தி வந்துள்ளார்.

    இந்தநிலையில் இன்று காலை அந்த மோட்டார் அறையில் இருந்து பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. அடுத்த ஒருசில விநாடிகளில் அந்த அறை முழுவதுமாக இடிந்துவிழுந்து தரைமட்டமானது. சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ள விவசாய நிலத்தில் வேலை பார்த்துக்கொண்டு இருந்தவர்கள் ஓடிவந்தனர்.

    மேலும் இதுதொடர்பாக தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீசாருக்கு தக வல் தெரிவித்தனர். அதன் பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கட்டிட இடிபாடுகளை அகற்றி பார்த்தபோது, அங்கு வாலிபர் ஒருவர் உடல் சிதறிய நிலையில் இறந்து கிடந்தார்.

    போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், சட்டவிரோத பட்டாசு தயாரிப்பின்போது ஏற்பட்ட உராய்வு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டதும், அதில் சிக்கி பலியானது சிவகாசி அருகேயுள்ள மீனம்பட்டியை சேர்ந்த அஜித் (வயது 27) என்பதும் தெரியவந்தது. மேலும் இதுதொடர்பாக சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து பட்டாசு தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டு வந்த ராஜ கோபாலை தேடி வருகிறார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சாலை விபத்தில் விக்னேஷ் இறந்து ஒரு வாரம் கழித்து அவரின் வீட்டிற்கு நாய் ஒன்று வந்துள்ளது.
    • விக்னேஷ் விருப்பப்பட்டு சாப்பிடும் உணவுகளையே இந்த நாயும் ஆசைப்பட்டு சாப்பிடுவதாக அந்த குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் காசினகெரே பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ்(23). அந்த பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர் தினமும் தனது மோட்டார் சைக்கிளில் வேலைக்கு செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் வேலைக்கு சென்றுவிட்டு இவர் வீட்டுக்கு திரும்பியபோது விபத்து ஏற்பட்டு உள்ளது. விபத்தில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    மருத்துவமனையில் இவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது அவரிடம் போலீசார் விபத்து குறித்து விசாரித்து உள்ளனர். அப்போது அவர் நாய் குறுக்கே வந்ததால் விபத்து ஏற்பட்டதாகவும், மேலும் நாய் ஒன்று சாலையில் திடீரென வந்தது. அப்போது நாய் மீது மோதக்கூடாது என்பதால் வாகனத்தை உடனே திருப்பினேன். அப்போது நான் நிலைதடுமாறி சாலை தடுப்பில் மோதினேன் என்று கூறியுள்ளார்.

    இதை தொடர்ந்து தீவிர சிகிச்சை பலனளிக்காமல் அவர் இறந்தார்.

    சாலை விபத்தில் விக்னேஷ் இறந்து ஒரு வாரம் கழித்து அவரின் வீட்டிற்கு நாய் ஒன்று வந்துள்ளது. ஊரில் அதுவரை இல்லாத நாய் திடீரென அங்கே வந்துள்ளது. விக்னேஷ் பெற்றோர் நாயை விரட்ட முயன்றுள்ளனர். எவ்வளவு அடி வாங்கியும் அந்த நாய் செல்லவில்லை.

    எங்கும் செல்லாமல் அந்த நாய் அங்கேயே இருந்துள்ளது. முதலில் இதை விரட்ட முயன்றவர்கள் வேறு வழியில்லாமல் விட்டுள்ளனர். அதன்பின்தான் அந்த நாய் விக்னேஷ் புகைப்படத்தை பார்த்து வீட்டிற்குள் கண்கள் கலங்கி உள்ளது. அந்த நாயின் முகத்தை உற்றுப்பார்த்து விக்னேஷ் குடும்பத்தினர் இதன் முகம் விக்னேஷ் முகம் போலவே இருப்பதாக கூறியுள்ளனர்.

    அப்படியே விக்னேஷ் முகம் அந்த நாயிடம் முகத்தோடு ஒத்துபோய் உள்ளது. இதை பார்த்து குடும்பமே கதறி அழுதுள்ளனர். தொடர்ந்து நாயை வீட்டிலேயே வைத்துக்கொள்ள முடிவு செய்துள்ளனர். இந்த நாய் வேறு யாரும் இல்லை. இதுதான் விக்னேஷ். நாயாக மறுபிறவி எடுத்து வந்துள்ளான் என்று கூறியுள்ளனர். விக்னேஷ் விருப்பப்பட்டு சாப்பிடும் உணவுகளையே இந்த நாயும் ஆசைப்பட்டு சாப்பிடுவதாக அந்த குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    அதோடு இல்லாமல் அந்த மொத்த கிராமமும் இந்த சம்பவத்தால் அலறி உள்ளது. அந்த நாயின் முகத்தை உற்றுப்பார்த்து விக்னேஷ் ஊரை சேர்ந்தவர்கள் இதன் முகம் விக்னேஷ் முகம் போலவே இருப்பதாக கூறியுள்ளனர். அவரின் முகத்தில் இருக்கும் தழும்பு கூட நாயின் முகத்தில் இருப்பதாக கூறியுள்ளனர்.

    இன்னும் சிலரோ விக்னேஷ் சாக காரணமாக இருந்த நாயாக கூட இது இருக்கலாம், குற்ற உணர்ச்சி காரணமாக இங்கே வந்து இருக்கலாம். மற்றபடி இது மறுபிறவி ஆக இருக்க வாய்ப்பே இல்லை. அந்த நாய்தான் குறுக்கே வந்திருக்கும் என்றும் கிராமத்தினர் தெரிவித்தனர்.

    இந்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. கர்நாடகா மாநிலம் முழுவதும் இந்த சம்பவம் பற்றி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

    • கார்த்திக் மோட்டார் சைக்கிளை வாட்டர் வாஷ் செய்தபோது திடீரென மின்சாரம் தாக்கியது.
    • தண்ணீரின் வேகத்தில் அந்த எந்திரத்தின் முன்பகுதி கார்த்திக்கின் மார்பில் வேகமாக மோதியது.

    பூந்தமல்லி:

    பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக்(32), மெக்கானிக்கான இவர் மாங்காடு அடுத்த கொளப்பாக்கம் பகுதியில் இருசக்கர வாகனங்கள் பழுது பார்ப்பது மற்றும் வாட்டர் வாஷ் செய்யும் கடை நடத்தி வந்தார்.

    இந்த நிலையில் கார்த்திக் மோட்டார் சைக்கிளை வாட்டர் வாஷ் செய்தபோது திடீரென மின்சாரம் தாக்கியது. இதையடுத்து அவர் அந்த எந்திரத்தை கீழே வீசினார். இதில் தண்ணீரின் வேகத்தில் அந்த எந்திரத்தின் முன்பகுதி கார்த்திக்கின் மார்பில் வேகமாக மோதியது. இதில் மயங்கி விழுந்த அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே கார்த்திக் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    • கடந்த சில நாட்களாக மாமல்லபுரம், கல்பாக்கம் பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.
    • ராட்சத அலையில் சிக்கி மீனவர் நரேந்தர் சென்ற படகு கடலில் கவிழ்ந்தது.

    மாமல்லபுரம்:

    கல்பாக்கம் அடுத்த கூவத்தூர் சின்ன குப்பம் மீனவர் பகுதியை சேர்ந்தவர் நரேந்தர் (வயது 21). மீனவர். இவர் உறவினர்களான நரேஷ், சுரேந்தர் ஆகியோருடன் கடலுக்கு மீன்பிடிக்க படகில் சென்றார்.

    கடந்த சில நாட்களாக மாமல்லபுரம், கல்பாக்கம் பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால் கடலில் அலை சீற்றத்துடன் காணப்படுகிறது.

    இந்த நிலையில் ராட்சத அலையில் சிக்கி மீனவர் நரேந்தர் சென்ற படகு கடலில் கவிழ்ந்தது. இதில் நரேந்தரின் தலையில் படகின் என்ஜின் தாக்கியதில் அவர் பலத்த காயம் அடைந்தார்.

    உடன் இருந்தவர்கள் மீண்டும் படகை இயக்கி உயிருக்கு போராடிய நரேந்தரை மீட்டு கரைக்கு வந்தனர். பின்னர் நரேந்தரை சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கூவத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×